நாட்டிலேயே முதன்முறையாக, இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நம்பகமான அதிவேக குடிவரவு பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்தில் இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
விரைவான குடியேற்றத் திட்டத்தின் கீழ், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் OCI கார்டு வைத்திருக்கும் NRIகள் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் கைரேகை மற்றும் கருவிழி அடையாளத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களுக்கு ரூ.2,000, குழந்தைகளுக்கு ரூ.1,000, ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.