ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
உரியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின்படி அங்கு ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது.
இதில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
Discussion about this post