பிஹாரில் வாக்காளர் பட்டியலில் பாக். பெண்களின் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ளதை அறிந்துள்ளது. தற்போதைய தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, அவர்களது வாக்காளர் அட்டைகளும் சரிபார்க்கப்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் ஆய்வின் அடிப்படையில், விசா காலம் முடிந்த வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதைப் பற்றிய தகவல்கள் அடையாளம் காணப்பட்டன. இதற்காக மாவட்ட நீதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அந்த பெண்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்.பி. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
படிவம்-7 மூலம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற இவர்களின் பெயர்கள் நீக்கப்படவுள்ளது. விசாரணையில், வாக்காளர் பட்டியலில் இப்துல் ஹசன் மனைவி இம்ரானா மற்றும் தஃப்ஜில் அகமது மனைவி ஃபிர்தொசியா என்ற பெயர்கள் இருப்பதாக தெரியவந்தது. இவர்களும் முதியவர்கள், கடந்த 1956-ல் இந்தியாவிற்கு வந்துள்ளனர்; இம்ரானா 3 ஆண்டு விசா, ஃபிர்தொசியா 3 மாத விசா மூலம் இந்தியாவில் உள்ளனர்.
“தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது இதனை வட்ட அளவிலான அதிகாரியிடம் கொடுத்திருந்தோம். தேர்தலின் போது தொடர்ந்து வாக்களித்து வருகிறோம்” என்று ஃபிர்தொசியாவின் மகன் முகமது குர்லஸ் தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடப்பதால், கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது. வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி வெளியிட்டு, சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர திருத்த பணியில், இறந்தோர் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.