ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களின் பரிசுத் தொகையை உயர்த்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26ம் தேதி தொடங்குகிறது. இதில் 102 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 1 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 75 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
Discussion about this post