காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு – வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்
காஷ்மீரில் தொடர்ந்த கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால், மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாகவும் நிறுத்தப்பட்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டுகிறது. இதனால் ஆறுகள் வெள்ளம் நிரம்பி ஓடுவதோடு, மலைப்பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த விபத்தில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், காஷ்மீரில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வைஷ்ணவி தேவி கோயிலின் கத்ரா அடிவாரப் பகுதியில் 24 மணி நேரத்தில் 200 மில்லிமீட்டர் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது.
இந்த சூழலில், சம்மர் பாய்ன்ட் பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் நேற்று (செப்டம்பர் 2) 9-வது நாளாகவும் யாத்திரை நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஆனால், கோயிலுக்குள் பூஜாரிகள் தினசரி வழிபாடுகளை வழக்கம்போல நடத்தி வருகின்றனர்.