ஜிஎஸ்டி வரி குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்: அஸ்வினி வைஷ்ணவ்

வரவிருக்கும் நவராத்திரி முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரி குறைப்புகள், இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2014-க்கு முன்புவரை வரி அமைப்பு மிகவும் சிக்கலானதாக இருந்தது. பல்வேறு நிலைகளில் பொருட்களுக்கு தனித்தனியாக வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின் முறை எளிதானது. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்கும்.

பொதுமக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நவராத்திரி முதல் நாளிலிருந்தே புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.

இந்த ஜிஎஸ்டி மாற்றம் பொருளாதாரத்திற்கு கூடுதல் வலு தரும். தற்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.3.30 லட்சம் கோடி. இதில் ரூ.2.02 லட்சம் கோடி நுகர்வாகும். இந்த நுகர்வு 10% உயர்ந்தால் மட்டும் கூட, ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு கூடுதல் நுகர்வு ஏற்படும். இது ஜிடிபியிலும் பிரதிபலித்து, ஒரு நேர்மறையான பொருளாதாரச் சுழற்சியை உருவாக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box