பயங்கரவாத சதி வழக்கு – தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

பயங்கரவாத சதி வழக்கைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று (திங்கள்) தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் மொத்தம் 22 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டு வருகிறது.

விசாரணை தொடர்பாக பீஹாரில் எட்டு இடங்களில், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு இடத்தில், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில், ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மாநில காவல்துறையுடன் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

தேசவிரோத வலைப்பின்னலுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட RC-1/2025/NIA/CHE என்ற வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ, நாட்டில் கலவரத்தை தூண்டி சட்டம்-ஒழுங்கை பாதிக்க முயன்ற வலையமைப்புகள் இருப்பதாக கண்டறிந்துள்ளது. இதனையடுத்து, சமீபத்திய மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Facebook Comments Box