மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது…

0

மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் சாலையில் ஒரு பெண்ணும், ஆணும் மூங்கில் குச்சியால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக புகார் எதுவும் வராத நிலையில், வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த போலீசார், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாஜிமுல் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, இஸ்லாம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here