பொது வருங்கால வைப்பு நிதி, PPF என்றும் அழைக்கப்படுகிறது, இது மக்களின் நலனுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டுத் திட்டமாகும். அதில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நபர் நல்ல லாபத்தைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றி வருகிறது. இந்தக் கட்டுரையில், தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் பிபிஎஃப் திட்டத்திற்காக வழங்கப்படும் பிற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
PPF திட்டத்தின் வட்டி விகிதம் என்ன?: PPF மீதான வட்டி விகிதத்தை இந்திய அரசு நிர்ணயம் செய்கிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு மாறுபடும். 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த காலாண்டில் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். PPF வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது.
PPF முதிர்வு காலம்: PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். PPF திட்டத்தில், நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
PPF திட்டத்தின் கீழ் யார் கணக்கு திறக்க முடியாது?: PPF கணக்குகளை HUFகள், அறக்கட்டளைகள் அல்லது NRI பெயர்களில் திறக்க முடியாது.
பிபிஎஃப் வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: எச்டிஎஃப்சி வங்கி இணையதளத்தின்படி, உங்கள் பிபிஎஃப் கணக்கு வருமானத்தைக் கணக்கிடும்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் கீழே உள்ளன.
PPF திட்டத்திற்கான வட்டி: PPF திட்டத்திற்கான வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மாதத்தின் 5 ஆம் தேதி மற்றும் இறுதித் தேதியில் உள்ள குறைந்தபட்ச இருப்பு வட்டி கணக்கீட்டிற்கு கருதப்படுகிறது. மே 5ஆம் தேதி உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் ரூ.5,000 என்றும், மே 30ஆம் தேதி ரூ.10,000 என்றும் வைத்துக்கொள்வோம். வட்டி 5,000 ரூபாயில் கணக்கிடப்படும்.
உங்கள் PPF வருவாயை அதிகரிக்க, உங்கள் மாதாந்திர முதலீட்டை மாதத்தின் 5 அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்ய முயற்சிக்கவும். உங்கள் PPF வருமானம் ஒரு நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், பிரிவு 80சியின் கீழ், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெறலாம்.