கல்யாண கர்நாடகா பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினால், வட கர்நாடகத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க மிரட்டல் விடுத்துள்ளது. அரசியல் சாசனத்தின் 371 ஜே பிரிவின் கீழ் கல்யாண கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கக் கூடாது என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகவுடா பாட்டீல் யட்னல் வலியுறுத்தினார்.
கர்நாடகாவில், பெலகாவி, பாகல்கோட், பிதார், கல்புர்கி, யாத்கிர், ராய்ச்சூர், பெல்லாரி, கொப்பல், தார்வார்ட், ஹாவேரி ஆகியவை ஹைதராபாத் கர்நாடகா அல்லது கல்யாண கர்நாடகா என்று அழைக்கப்படுகின்றன. ஹைதராபாத் நிஜாம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இவை வெவ்வேறு பகுதிகளாக இருந்தன. பின்னர் கர்நாடகாவுடன் இணைந்தது. 2019 இல் தான் ஹைதராபாத்-கர்நாடகா கல்யாண கர்நாடகா என்று பெயர் மாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதேபோல், 2012ல், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அரசியல் சாசனத்தின் 371 (ஜே) பிரிவின் கீழ், கல்யாண கர்நாடகாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. கல்யாண கர்நாடகா வளர்ச்சிக்காக ரூ.2,500 கோடியில் தனி வாரியமும் அமைக்கப்பட்டது. கல்யாண கர்நாடகா பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% வரை முன்னுரிமை அளிக்கவும் இது கட்டாயமாக்கப்பட்டது.
இருப்பினும், 2018 முதல், கர்நாடக அரசுகள் கல்யாண கர்நாடகத்தைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டியும், வட கர்நாடகாவை தனி மாநிலமாகக் கோரியும் 2018 முதல் போராட்டங்களும் முழு அடைப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் கிருஷ்ணா மற்றும் மகதாயி நீர்நிலை பிரச்னைகளும் மிக முக்கியமானவை. கிருஷ்ணா நதிநீர் பிரச்னை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் சென்றன.
இந்நிலையில்தான் வட கர்நாடக மாநில கோரிக்கை குறித்து பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் பேசியுள்ளார். விஜயபுராவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பசனகவுடா பாட்டீல் யத்னால், கல்யாண கர்நாடகாவுக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். கல்யாண கர்நாடகாவின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் வட கர்நாடகா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்துவோம். எந்த கட்சி ஆட்சியிலும் மடாதிபதிகள் தலையிடக் கூடாது. அதில் தலையிட உரிமை இல்லை என்று கூறினார்.
Discussion about this post