வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 2007-2012ம் ஆண்டுக்குள் விஜய் மல்லையாவுக்கும் அவரது நிறுவனத்துக்கும் வழங்கப்பட்ட ரூ.180 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
விஜய் மல்லையா உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விஜய் மல்லையா ஆஜராகாததால், மும்பை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்தது.