எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசுகையில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இந்துக்களை துன்புறுத்துவது காங்கிரஸின் வாடிக்கையாகி விட்டது என்று கூறிய பிரதமர் மோடி, இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளதால் அவர்களை விமர்சிக்கிறார்களா என்று காங்கிரசுக்கு கேள்வி எழுப்பினார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.
Discussion about this post