2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே தனது இலக்கு… பிரதமர் மோடி உறுதி

0

2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே தனது இலக்கு என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பணிக்காக அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டார்.

2014க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் தலையெழுத்து என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக கூறிய பிரதமர், அப்போதைய காங்கிரஸ் அரசு மௌனம் சாதிப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அப்போது பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கேரளாவில் முதல்முறையாக பாஜக எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here