நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு: இமாச்சலப் பிரதேசத்தில் மேடையிலேயே நாடக நடிகர் உயிர்நீத்தார்
நடித்து கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே நாடக நடிகர் உயிரிழந்த சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம் சம்பா பகுதியைச் சேர்ந்தவர் அம்ரேஷ் மகாஜன் (70). நாடக நடிகரான இவர் பல்வேறு நாடகங்களில் பல வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். பெரும்பாலும் இவர் ராமாயணம், மகாபாரதம், ராம்லீலா போன்ற நாடகங்களில் நடித்தார்.
முன்தினம் சம்பா பகுதியில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் தசரத மகாராஜா வேடமிட்டு நடித்து கொண்டிருந்த அம்ரேஷ் மகாஜன், ராஜ சபையில் சிம்மாசனத்தில் அமர்ந்தபோதே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அம்ரேஷ் மகாஜன் உயிரிழந்தார், மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வயதான காலத்திலும் அம்ரேஷ் மகாஜன் தசரதன், ராவணன் உள்ளிட்ட வேடங்களில் நடித்தார். அவர் பங்கேற்கும் இந்த ராம்லீலா நாடகம் தான் தனது கடைசி நாடகம் என்று அனைவருக்கும் கூறி வந்தார். அதன்படியே, மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது.
அவர் உயிரிழந்ததைப் பார்த்த சக நடிகர்கள், நடிகைகள் கண்கலங்கி அழுந்தனர்; இதன் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கவைத்ததாக அமைந்தது.