தென் அமெரிக்கா நாட்டான கொலம்பியாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது இஐஏ பல்லைக்கழகத்தில் மாணவர்களுடன் சந்தித்து உரையாடினார்.

அந்த சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:

“இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இணைந்திருக்கின்றன. ஜனநாயக அமைப்பு எல்லோருக்கும் இடம் வழங்கும் தளமாக இருக்கிறது. ஆனால் தற்போது, பாஜக தலைமையிலான அரசு பல திசைகளில் இந்த அமைப்பை தாக்குகிறது. இதுவே இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று குற்றச்சாட்டினை எழுப்பினார்.

இதற்கு பதிலாக, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராகுல் காந்தி வெளிநாட்டில் அடிப்படையற்ற விஷயங்களை பேச்சு செய்கிறார். வெளிநாட்டில் இருந்து இந்திய அரசின் மீது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகிறார். இது, இந்திய அரசியலமைப்பையும் அரசுக் கொள்கைகளையும் வெளிநாட்டு தீய சக்திகள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு ஒப்பானது. மலேசியாவில் இருந்து ஜாகிர் நாயக் (பிஎப்ஐ) பேசுவது, கனடாவிலிருந்து காலிஸ்தான் தீவிரவாதி பன்னு பேசுவது போல, ராகுல் காந்தியின் பேச்சும் இந்தியாவுக்கு எதிரானது.

அதனால், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தூதரக பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நிஷிகாந்த் துபே வலியுறுத்தினார். அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், லடாக்கில் பருவநிலை பாதுகாப்பு ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லடாக்கில் ஏற்பட்ட வன்முறைக்கு வெளிநாட்டு சதி பின்னணியாக இருந்தது வெளிப்படையாக தெரிய வந்துள்ளதாகவும், அதற்காகவே என்.ஐ.ஏ அவரை கைது செய்துள்ளதாகவும் நிஷிகாந்த் தெரிவித்தார்.

Facebook Comments Box