நாட்டிற்காக உயிரை தியாகம் செய்வதை விட வாழ்வது சிறந்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாணவர் விடுதியை திறந்து வைத்த அவர், குஜராத்தின் வளர்ச்சிக்கு கட்வா படிதார் சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார்.
மாணவர்கள் படித்து முடித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல்வேறு உயர் பதவிகளை அடைந்தாலும் நாட்டுக்கு சேவை செய்வது முக்கியம் என்றும் அவர் கூறினார். முன்னதாக, நவீன பன்நோக்கு மருத்துவமனையை அமித் ஷா திறந்து வைத்தார்.