ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய இந்தியர்கள் விரைவில் விடுதலை… தூதரக அதிகாரி

0

ரஷ்ய ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் வேலைக்காக விண்ணப்பித்த பெரும்பாலான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.

உக்ரைனுக்கு எதிரான போரில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ரஷ்ய ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

அந்த வகையில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here