பீகாரில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பட்நாகா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில் துமாரியா கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போஜ்பூர் மாவட்டம் பர்கா கோன் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 18 பேர் மின்னல் தாக்கி பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் அர நகரில் உள்ள சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.