முன்னாள் அக்னிவீரர்களுக்கு CISF கான்ஸ்டபிள் பணியிடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு…

0

முன்னாள் அக்னிவீரர்களுக்கு CISF கான்ஸ்டபிள் பணியிடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம் ஜூன் 2022 இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 17 முதல் 21 வயதுடைய வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சி.ஐ.எஸ்.எஃப். துணை ராணுவப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் நினாசிங் மற்றும் எல்லைக் காவல் படை (பிஎஸ்எஃப்) கூட்டுப் படைத் தலைவர் நிதின் அகர்வால் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நினாசிங் கூறியதாவது:-

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் உள்ள வீரர்கள் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, முன்னாள் அக்னிவீரர்களுக்கு சிஐஎஸ்எஃப்-ல் இணைப்பதற்கான செயல்முறையை நாங்கள் தயார் செய்து வருகிறோம். இனிவரும் கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அவர் கூறியது இதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here