ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சர்வாதிகார மனோபாவத்துடன் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து அவசர நிலையை அறிவித்தார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், எமர்ஜென்சி காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாகக் கடைப்பிடிக்கவும், எமர்ஜென்சி காலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அமித்ஷா கூறினார்.