நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்த நீதிபதி ஹர்தீப் கவுர், அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவல் அன்றைய தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.