நடப்பு மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பல கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், நமது சமுதாயத்தை மாற்ற பல இளைஞர்கள் கூட்டு முயற்சி எடுத்து வருவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். MyGov, NaMo ஆப் அல்லது 1800-11-7800 மூலம் மனத்தின் குரல் திட்டம் தொடர்பான ஆலோசனைகளை அனுப்பலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.