பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக கடந்த 8ம் தேதி ரஷ்யா சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணமாக ரஷ்யாவுக்கான பயணம் அமைந்தது.
இந்தப் பயணம் சர்வதேச கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.