பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் இந்திய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் மத்திய அரசின் மானியம் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே வலுவான பொருளாதார பின்னணி உள்ளதால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 டாலர்கள் அதாவது தலா 25 ஆயிரம் இந்திய ரூபாய் மற்றும் 1000 டாலர்கள் அதாவது ஐந்து நாட்கள் பாரிசில் தங்கியதற்காக சுமார் 90 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.