80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்…. ஐநா பொதுச் சபைத் தலைவர்

0

ஸ்மார்ட்போன்களின் உதவியால் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று ஐநா பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பாராட்டினார்.

இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐநா பொதுச் சபையில் பேசிய டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார்.

கிராமங்களுக்கும் வங்கி சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார். டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியாவை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் அடிப்படைத் தேவை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here