டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0

டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்களை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடந்தது.இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

பாஜக 104 வார்டுகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் தனது அதிகாரத்தின்படி 10 உறுப்பினர்களை நியமித்தார். துணை நிலை ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ​​துணை நிலை ஆளுநருக்கு துணைவேந்தர்களை நியமிக்க பார்லிமென்ட் அதிகாரம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதில் மாநில அரசு தலையிட முடியாது என தீர்ப்பளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here