பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி….

0

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 60வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் ஆடவர் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவும் ஜெர்மனியும் மோதின.

பரபரப்பான ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 18 மற்றும் 27வது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர். பின்னர் ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன.

இதையடுத்து, ஆட்டத்தின் முடிவில் 54-வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. இதனால் ஜெர்மனி 3 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு ஜெர்மனி முன்னேறியது. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா, நாளை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here