காஷ்மீர் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை…

0

காஷ்மீர் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி செப்டம்பர் 18ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 25ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடக்கிறது.அக்டோபர் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அதே சமயம், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர், வாட்டர்கெம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here