செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படத்தை தவறாக சித்தரித்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை…

0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இளம்பெண் புகைப்படத்தை தவறாக சித்தரித்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி அதே பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். வீட்டு உரிமையாளரின் மகன் யாருக்கும் தெரியாமல் அந்த இளம் பெண்ணை புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளார். மேலும், தனது நண்பருடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணிடம் அநாகரீகமான புகைப்படத்தை காட்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளோம் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அந்த இளம்பெண் அச்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளம் பெண்ணை, அவரது நண்பரான மற்றொரு வாலிபரும், இணையதளத்தில் ஆபாச புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here