சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம்

0

மகாராஷ்டிர மாநிலம் மால்வானில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் ரூ.76,000 கோடி மதிப்பிலான வடவான் துறைமுகத் திட்டத்துக்கும், ரூ.1,560 கோடி மதிப்பிலான பல்வேறு மீன்வளத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீபத்தில் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி, தனக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜா வெறும் பெயர் அல்ல, தெய்வம் என்று கூறினார்.

வடவான் துறைமுகம் மிகப்பெரிய சரக்கு கையாளும் துறைமுகமாக மாறும் என்றும், இதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here