உலகையே அதிர வைத்த இந்திய வெளியுறவு அமைச்சகம்… அதிரடி காட்டுகிறார் ஜெய்சங்கர் ஜி…!

0

ஐநா சபை பாதுகாப்பு மாநாட்டின் இடையே ஜெய்சங்கரை புகழ்ந்த ரஷ்ய அமைச்சர் – செய்தி தொகுப்பு.

ரஷ்யாவிடம் பெட்ரோலியம் வாங்குவது பற்றி என் நண்பரான இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஐநா விவாதத்தில் கலந்து கொண்ட மேற்கத்திய நாட்டினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நீங்கள் எவ்வளவு பெட்ரோலியம் ரஷ்யாவிடமிருந்து வாங்கினீர்கள்? வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது தெரியும். எனவே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறிவிட்டார். இதுதான் ஒரு தேசத்தின் கௌரவம்! என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஜெய்சங்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பொருளாதார தடை விதித்திருக்கும் ரஷ்யாவிடம் இருந்து பாரதம் எப்படி பெட்ரோல் வாங்குகிறது? என்று மேற்கத்திய நாடுகள் கேட்கும் போது அதே தடை இருக்கும்போது நீங்கள் ரஷ்யாவிடம் இருந்து எப்படி பெட்ரோலியம் வாங்குகிறீர்கள்? என்று திருப்பி கேட்கிறார் பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர். மேற்கத்திய நாடுகள் மௌனமாகிறது.

அணு ஆயுதங்கள் கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் போது உங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கிறது பாரதம். வல்லரசு நாடுகள் அமைதியாகிறது.

அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் நிர்தாட்சண்யமாக கையொப்பமிட வேண்டும் என்று கேட்கும் போது அதில் முதலில் நீங்கள் கையெழுத்திடுங்கள். பிறகு நாங்கள் கையொப்பம் இடுகிறோம் என்று சொல்லி அவர்களை ஓட விடுகிறார்கள்.

காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் பாகிஸ்தானுடன் பேசுங்கள் என்று கேட்கும் பிரிட்டனிடம் கொஞ்சம் அயர்லாந்து அமைதியை பற்றி நாமும் பேசலாமா? என்று கேட்டு முகத்தில் அடிக்காமல் அடித்தார்கள்.

பாரதத்தில் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்ட நாடுகளிடம் கொஞ்சம் உங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களை பற்றி பேசலாமா? என்று கேட்டார் ஜெய்சங்கர்.

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மேற்குலக நாடுகளிடம் இதே நிலைப்பாடு உங்களின் எல்லை பிரச்சனைக்கும் பொருந்துமா? என்று திருப்பி கேட்டு வாய் அடைத்தார்கள்.

மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது என்பார்கள். அவ்வகையில் தேச நலனும் கறை படியாத கரங்களும் இருப்பதால் எந்த ஒரு நாட்டையும் அண்டி இருக்க வேண்டிய அவர்களின் உளவுத்துறை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் பாரதத்தின் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. தேசம் நலன் மட்டுமே பிரதானம் என்பதால் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்று அனைவருக்கும் அவர்களது கேள்வியிலேயே பதில் அளித்துவிட்டு தேச நலனை பாதுகாக்கிறார்கள்.

என்? இதனைக் கடந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு இதில் பத்தில் ஒரு விஷயம் கூடவா தெரியாது? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த அளவிற்கு துணிச்சல் இல்லை என்றாலும் இதில் நூறில் ஒரு பங்காவது இருந்திருக்கும். ஆனால் அவர்கள் பேசவில்லை. சர்வதேச நெருக்கடிகளுக்கு எல்லாம் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். அவர்களின் நெருக்கடிகளுக்கு இந்த தேசத்தையே பலி கொடுத்தார்கள்.

காரணம் இரண்டு.

ஒன்று அவர்களும் அவர்கள் சார்ந்திருந்த தலைமையும் கட்சியும் எந்த காலத்திலும் பாரதம் தலைநிமிர்ந்து விடக்கூடாது என்ற சித்தாந்தத்தில் பிரிட்டிஷ் ஆசியில் பிறந்து வளர்ந்தது. அதனால் அவர்களால் இந்த தேசத்தின் நலனை எங்கேயும் நிலை நிறுத்த முடியவில்லை.

இரண்டாவது எங்கும் ஊழல் . எதிலும் ஊழல். என்று போகும் இடத்தில் எல்லாம் கடன் நிதியுதவி கேட்பது. இல்லையேல் உள்நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை பதுகுவதற்கு வழி தேடுவது என்ற காரணம், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் உளவுத்துறையை பார்த்து அஞ்சி கூழை கும்பிடு போட்டு வாழ வேண்டிய அவசியம். அதனால் எந்த இடத்திலும் தேசத்தின் நலனை பற்றி பேச இல்லை நினைக்கக் கூட முடியாது.

பேருக்கு ஒரு அரசாங்கம். கொள்ளையடிப்பதற்கு அதிகாரம். அரசியல் செய்வதற்கு சிறுபான்மை நலன் – மதச்சார்பின்மை – இந்துத்துவவாதிகளை பழிக்கும் இந்து துவேசம் என்று 60 ஆண்டுகள் இந்த தேசத்தை குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள்.

வெறும் 140 சீட்டுகளை கையில் வைத்திருந்த வாஜ்பாய் கூட இந்தியா, பாகிஸ்தான் கார்கில் யுத்தத்தின் போது வெளிப்படையாக மிரட்டிய அமெரிக்காவிடம் அணுகுண்டு யுத்தத்தை எதிர்கொள்ள பாரதம் தயாராக இருக்கிறது. பாரதத்தின் அணு ஆயுத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாரா? என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று நெற்றியில் அடித்தார் போல் சொல்லிவிட்டு வந்தார்.

இதுதான் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு. பாஜகவின் தேசிய சித்தாந்தம். அதைத்தான் இன்று மோடி – ஜெய்சங்கர் – ஆஜித் தோவல் கூட்டணி சர்வதேச அரங்கில் நிரூபிக்கிறது. எங்களின் தேசிய இறையாண்மை – தேச நலன் – பாதுகாப்பு ஒன்றே எங்களுக்கு பிரதானம். அதை எதிர்ப்பவர்கள் எங்களின் எதிரிகள். அதை ஆதரிப்பவர்கள் எங்களின் நண்பர்கள். என்று ஒற்றை வரியில் அயலுறவு கொள்கையை பின்பற்றுகிறார்கள். அதில் அவர்களுக்கு இருக்கும் தெளிவு – உறுதி – தீர்க்கமான பார்வை அனைத்துமே இந்த தேசத்தின் கடந்த கால துரோகங்களை சரி செய்யவும் , இழந்தவற்றை மீட்கவும், இருப்பவற்றை பாதுகாக்கவும், தேசத்தின் எதிர்காலத்தை வலுவாக கட்டமைக்கவும் தான் என்பதை சர்வதேச நாடுகள் தெளிவாக உணர்ந்துள்ளது.

அதில் அவர்களுக்கு பொறாமை – ஆதிக்க மனோநிலை – எரிச்சல் எல்லாம் இருக்கும். ஆனால் அவர்களால் வெளிப்படையாக ஏதும் செய்ய முடியாது. காரணம் இன்று பாரதத்தை ஆள்பவர்கள் அதன் இறையாண்மை நலனுக்காக எந்த எல்லைக்கும் போக துணிந்தவர்கள். அதன் பாதுகாப்பு கௌரவத்தை நிலை நிறுத்துவதற்காக எதையும் எதிர்கொள்ள துணிந்தவர்கள் என்பதால் மரியாதை கொடுத்து மரியாதை வாங்குகிறது சர்வதேச சமூகம்.

இது தான் தேசிய இறையாண்மை. தேசப்பற்று. ஆனால் இதன் அர்த்தம் தெரியாதவர்கள் கடந்த காலங்களில் இதே ஐநா சபையில் பகை நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த வெள்ளை தோல் பெண்மணிக்கு கை கொடுக்கிறேன் பேர்வழி என்று அசடு வழிந்து சபையே கை கொட்டி சிரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். அன்று நிறைந்த அவையில் கேவலப் பட்டது அவர்களும் அவர்கள் கட்சியும் மட்டும் அல்ல. பாரதத்தின் மாண்பும்தான் என்பதை இன்று வரை அவர்கள் உணரவில்லை. உணர்ந்திருந்தால் உலக அரங்கில் தேசத்தை வலுவாக கௌரவமாக நிலை நிறுத்துபவர்களை பார்த்து பரிகாசம் செய்ய மாட்டார்கள் .

இவ்வளவு எதிர்க்கட்சிகளை தேசத்தின் எதிரி கட்சிகளை வைத்துக்கொண்டே சர்வதேச அரங்கில் தேசத்தின் நலன் பாதுகாப்பை உறுதி செய்வது சர்வதேச அரங்கே பாரதத்தின் கௌரவத்தை நிலை நிறுத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு வெறும் வீரம் – விவேகம் – தீரம் – சாதுரியம் – திறமை – பொருளாதாரம் – தொழில்நுட்ப வளர்ச்சி – நம்பிக்கை மட்டும் போதாது . நிச்சயம் இறையருளும் இருக்க வேண்டும். இவை யாவும் இந்த தேசத்தின் ஆட்சியாளர்களுக்கு அவர்களின் தேச பற்றுதல் காரணமாக வரமாக வாய்க்கப் பெற்றதன் காரணம் இன்று உலக அரங்கில் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

இந்த தேசிய உணர்வும் பற்றுதலும் கொண்ட ஆட்சியாளர்கள் என்றைக்கும் பாரதத்தின் அரியணையை அலங்கரிக்கட்டும். அவர்களால் இந்த தேசமும் மக்களும் உலக அரங்கில் என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கட்டும்.

[youtube https://www.youtube.com/watch?v=mAJQcJ1G3qc&w=853&h=480]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here