வளர்ந்த இந்தியா என்ற இலக்கு நிறைவேறும் வரை ஓயமாட்டேன்…. பிரதமர் மோடி

0

வளர்ந்த இந்தியா என்ற இலக்கு நிறைவேறும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளம் பக்கத்தில் பதிவிட்டு, கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றார்.

ஒரு அரசாங்கத்தின் தலைவராக 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.

தன்னைப் போன்ற ஒரு எளிய தொழிலாளிக்கு மாநில நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பை வழங்கியது பாஜக தான் என்று அவர் அன்புடன் குறிப்பிட்டார்.

25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கு நனவாகும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் என்றும், அதற்காக இன்னும் தீவிரமாக பாடுபடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here