டாடா டிரஸ்டின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு, நோயல் டாடா இந்தியாவின் மிக முக்கியமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
நோயல் டாடா முதலில் டாடா இன்டர்நேஷனலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நோயல் டாடா 1999 இல் ட்ரெண்டின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றதில் இருந்து வெஸ்ட்சைட் லாபம் ஈட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
2003 இல், அவர் டைட்டன் மற்றும் வோல்டாஸின் இயக்குநரானார். மேலும், நோயல் டாடா டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்தார்.
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே டாடா அறக்கட்டளையின் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.