ஹரியானாவில் பாஜக அரசு அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பஞ்ச்குலாவில் வரும் 15-ம் தேதி புதிய பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய பஞ்ச்குலா துணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக்தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.