பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக லாவோஸ் சென்ற வியன்டியானில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டையொட்டி, தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவத்ராவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
தாய்லாந்து பிரதமராக பதவியேற்ற பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக பிரதமர் மோடிக்கு சினவத்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாட்டு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். துணை பிராந்திய, பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், பிம்ஸ்டெக் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
இந்த ஆண்டு தாய்லாந்துடனான இந்தியாவின் உறவுகளின் தசாப்தத்தை குறிக்கும் நிலையில், இந்த உறவு இந்தியாவின் ‘கிழக்கு பார் கொள்கை’ மற்றும் இந்தோ-பசிபிக் மீதான இந்தியாவின் கண்ணோட்டத்தின் முக்கிய தூணாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.