முதற்கட்டமாக போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்துக்கு இந்தியா 30 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பியது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில இஸ்ரேலியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இதையடுத்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா சார்பில் முதற்கட்டமாக 30 டன் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இதுகுறித்து, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள், பொது பொருட்கள் மற்றும் பொது மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.