முக்கிய ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்சும் கையெழுத்து…

0

டெல்லியில் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்சும் கையெழுத்திட்டனர்.

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ​​பாதுகாப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை இரு நாட்டு பிரதிநிதிகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர் இந்தியா மற்றும் ஜெர்மனியை கவலையடையச் செய்கிறது. போர்க்களத்தில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று கூறிய பிரதமர் மோடி, அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here