ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 32வது ஆண்டு நினைவு நாள் இரங்கல்… அண்ணாமலை

0

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 32வது ஆண்டு நினைவு நாளில் உயிரிழந்தவர்களுடன் இரங்கல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “1993 ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்த கருப்பு நாள் இன்று” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

தீவிரவாதிகளால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட 11 தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறோம்.

பேரிடர் காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ்., மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், போலிப் பிரசாரங்களைக் கண்டு பின்வாங்காமல், எத்தனை தடைகள் வந்தாலும், தாய் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.

எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மரியாதை கொடுப்போம், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் தியாகத்துக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here