அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்… அண்ணாமலை பேட்டி

0

இன்று காலை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைப் பார்வையிட்டோம்.

மரக்காணம் பகுதியில் 3500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் மூழ்கியுள்ளது. ஒரு நாளைக்கு 300 டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் இந்தப் பகுதியில், ஆண்டுக்குச் சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். 5000க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள், இந்தப் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தி செய்யப்படும் உப்பை, அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை பாஜக முன்னெடுத்துச் செல்லும்.

அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்… அண்ணாமலை பேட்டி | AthibAn Tv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here