பாஜக ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டில் அனைத்து மொழிகளும் கற்கும் சூழல் உருவாகும் – ராம ஸ்ரீனிவாசன்

0

பாஜக ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டில் அனைத்து மொழிகளும் கற்கும் சூழல் உருவாகும் – மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன்

சென்னை மேற்கு மாம்பலத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான்” எனக் குறிப்பிட்டார். மேலும், “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மொழிகளையும் கற்கும் நிலை உருவாகும். டாஸ்மாக் கடைகளின் அனுமானமே இல்லாத அளவிற்கு தமிழக சமூகத்திற்குள் மாற்றம் வரும்” எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here