மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருவாரூரில் மிஸ் கால் மூலம் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார்.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலுக்கு வெளியே பொதுமக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால்களை கொடுத்து பாஜக உறுப்பினராகும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.