விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, உயிரி உரங்கள்: கோத்தாரி நிறுவனம் அறிமுகம்

0

விவசாயப் பயன்பாட்டிற்காக 35 புதிய வேளாண் தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய கோத்தாரி நிறுவனம்

விவசாயிகளின் உற்பத்தி செயல்திறனை உயர்த்தும் நோக்கில், 35 புதிய வகை பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சை நாசினிகள் மற்றும் உயிரி உரங்கள் ஆகியவை கோத்தாரி நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறையில் பழமை வாய்ந்த பெயர் கொண்ட கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன், விவசாய உற்பத்திக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை தயாரித்து வருகிறது. தற்போது, இது புதிய தயாரிப்புகளாக திரவ உரங்கள் உட்பட 35 வகைகள்விற்கு மேல் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த புதிய தயாரிப்புகள் குறித்து அறிமுக விழா சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜே. ரபீக் அகமது, துணை தலைவர் கார்த்திகேயன், மற்றும் ஆலோசகர் ஜெயந்த் முரளி ஆகியோர் பங்கேற்று புதிய தயாரிப்புகளை வெளியிட்டனர்.

மேலும், விவசாயிகள் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்க Tech Kothari என்ற செயலியைவும், விசேட ஹெல்ப்லைன் எண்ணையும் (9095290953) அறிமுகப்படுத்தினர்.

பின்னர், நிருபர்களிடம் நிர்வாகத் தலைவர் ரபீக் அகமது கூறியதாவது:

கோத்தாரி நிறுவனம் மற்றும் விவசாயிகள் இடையே நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு உதவ 35 புதிய மருந்துகள், உயிரி உரங்கள் மற்றும் திரவ மருந்துகளை அறிமுகம் செய்துள்ளோம். முக்கியமாக, ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்க செயலி மற்றும் பதிவு வசதி கொண்ட ஹெல்ப்லைன் அறிமுகமாகியுள்ளது,” என்றார்.

“ஒரு ஏக்கர் நிலத்திற்கு மருந்து தெளிக்க வழக்கமாக அரை நாள் நேரம் தேவைப்படும். ஆனால் ட்ரோன் மூலம் ரூ.500 செலவில் 10 நிமிடங்களில் இந்த பணியை முடிக்கலாம். விவசாயிகள் எங்களை தொடர்பு கொண்டால், ட்ரோன், மருந்துகள் மற்றும் ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய வாகனம் உடனடியாக அவர்களிடம் சென்றடையும்.”

மதுரையில், நாங்கள் ட்ரோன் உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம். இதன்மூலம் ட்ரோன் பைலட்டுகள் தயாராகி, செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குறைந்த செலவில் உயர்தர சேவையை வழங்கும் இந்த முயற்சி, வேளாண் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க ட்ரோன் மட்டுமே பயன்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகும்,” எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here