கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய போருக்கு தயாராக இருக்கவேண்டும் – கவுதம் அதானி வலியுறுத்தல்
காரக்பூர் ஐஐடி பிளாட்டினம் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:
“உலகம் பாரம்பரிய போர்களிலிருந்து தொழில்நுட்ப போர்களுக்கு மாறியுள்ளது. இதற்கிடையில் எதிர்காலத்தை நிர்ணயிப்பது நமது தயாரிப்புத் திறன்தான். இன்றைய போர்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப சார்ந்தவையாக உள்ளன. அவை போர்க்களத்தில் நடக்கவில்லை; கணினி சர்வர்களில் நடைபெறுகின்றன. துப்பாக்கிகள் அல்ல, ‘அல்காரிதங்கள்’ ஆயுதங்கள் ஆகிவிட்டன. நிலமேல் அல்ல, ‘டேட்டா சென்டர்கள்’ பேரரசுகளுக்கு தளம். வீரர்கள் அல்ல, ‘பாட்நெட்கள்’ படைகள்.”
“நமது நாடு தொழில்நுட்பத்தில் சார்ந்துள்ள நிலையில், 90% குறைக்கடத்திகளை இறக்குமதி செய்கிறோம். இதில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெயில் 85% இறக்குமதி செய்யப்படுவதால், உலகில் எங்கோ நடக்கும் புவி அரசியல் நிகழ்வுகள் நமது வளர்ச்சியை தடுக்கக்கூடும்.”
“எனவே, புதிய வகை போர்களுக்கு தயாராகும் திறன்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இதற்கு அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற வேண்டும்” என அவர் தெரிவித்தார்