ஐசிஎஃப் தயாரித்த நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியாணாவுக்கு அனுப்பி வைப்பு

சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று அனுப்பப்பட்டது. அடுத்த சில மாதங்களில், ரயில் பல்வேறு கட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்படும்.

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் உலகப் புகழ்பெற்ற ரயில் தயாரிப்பு தொழிற்சாலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூ.118 கோடியில் தயாரிக்கப்பட்டு, நீராவியை மட்டுமே வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மின்சார ரயில்களைவிட சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. தற்போதைய திட்டப்படி, முக்கிய நகரங்களுக்கு குறுகிய தூரத்திற்கு மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • ரயில் அதிகபட்சமாக 50–80 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும்.
  • 10 பெட்டிகள் உள்ள ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் 84 பயணிகள் பயணம் செய்யலாம்.
  • ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும்.

இந்நிலையில், இந்த ரயில் சென்னையில் இருந்து ஹரியானாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது, ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படும். சோதனை முடிந்த பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளிக்கும். அதன் பின் ஹரியானா மாநிலம் சோனிபேட் – ஜிந்த் இடையே சில வாரங்களுக்கு வெறும் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு சேவைக்கு கொண்டு வரப்படும்.

Facebook Comments Box