தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை எட்டும் நிலை
சென்னையில் இன்று (செப்டம்பர் 30) 22 காரட் நகைத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகள் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பதும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிழப்பு, உக்ரைன்–ரஷ்யா போர், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் ஆகியவை தங்க விலையை வேகமாக உயர்த்தி வருகின்றன.
இதேபோல் பல வணிக நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் முதலீடு சார்ந்து வெள்ளியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன. மின்சார சாதனங்கள் உற்பத்தியில் வெள்ளி முக்கிய பங்காற்றுகிறது. மேலும் உலக நாடுகளும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்து வருவதால், வெள்ளி விலை உயர்விற்கு அதுவும் காரணமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை, இன்றும் மேலே சென்றுள்ளது. சென்னையில் 22 காரட் நகைத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90, பவுனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,860 மற்றும் ஒரு பவுன் ரூ.86,880 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.1, கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.161 மற்றும் ஒரு கிலோ ரூ.1,61,000 என விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களின் தங்க விலை நிலவரம்:
- செப்.30 – ஒரு பவுன் ரூ.86,880
- செப்.29 – ஒரு பவுன் ரூ.86,160
- செப்.27 – ஒரு பவுன் ரூ.85,120
- செப்.26 – ஒரு பவுன் ரூ.84,400
- செப்.25 – ஒரு பவுன் ரூ.84,080