ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக தொடர்கிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதமாகவே தொடர முடிவு எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். இதனால் வீடு, வாகனக் கடன்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறைந்துவரும் ரெப்போ விகிதம்: கடந்த சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆனது. அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 0.50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாற்றம் இல்லாமல் 5.5% ஆக தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உலகளாவிய பொருளாதார சூழல், அமெரிக்காவின் வரி நடவடிக்கைகள், பணவீக்கம், ஜிடிபி போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Facebook Comments Box