‘வாடிவாசல்’ தாமதமாகியதற்கான காரணங்கள் வெளியாகின புதிய தகவல்கள்

‘வாடிவாசல்’ தாமதமாகியதற்கான காரணங்கள் வெளியாகின

வெற்றிமாறன் இயக்க, சூர்யா நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம், தாணு தயாரிப்பில் உருவாக இருந்தது. ஆனால் படம் தாமதமானதால், சூர்யா வெங்கி அட்லுரி இயக்கும் படத்திற்கு தேதிகளை ஒதுக்கியுள்ளார். இதனால் ‘வாடிவாசல்’ எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், வெற்றிமாறன் தற்போது சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தை தொடங்கியுள்ளார்.

தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது, ‘வாடிவாசல்’ திட்டம் கைவிடப்பட்டதாகவே சிலர் கருதுகிறார்கள். இதுபற்றி விசாரித்த போது, சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் உருவாக்குவது குறித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பில், சூர்யா தரப்பினர், முழுமையான கதையை வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “நான் படப்பிடிப்பு செய்வதன் போது தான் கதையின் போக்கை சீரமைப்பேன்; அதன்பின் முடிவு செய்வேன்” என கூறியுள்ளார். ஆனால், சூர்யா, “படப்பிடிப்பு நாள்களும், முழுமையான கதையும் முன்கூட்டியே உறுதி செய்யப்பட்ட பிறகு தான் படம் தொடங்க வேண்டும்” என தெளிவாக கூறியுள்ளார். இதற்கேற்ப, வெற்றிமாறனும் “முழுமையான கதையைத் தயார் செய்து பிறகு வருகிறேன்” என தெரிவித்துவிட்டார்.

தற்போது, ‘வாடிவாசல்’ கதை சுமார் 60% வரை மட்டுமே உருவாகியுள்ளது. அந்தக் கதையை முழுமையாக முடித்து, ஒரே அமர்வில் சூர்யாவிடம் விவரிக்க வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடு. இரண்டு பாகங்களாகக் கதையைச் சொல்லும் யோசனைக்கு இடமில்லை என்பதையும் சூர்யா ஏற்கனவே விளக்கியுள்ளார். எனவே, வெற்றிமாறன் முழு கதையைத் தயார் செய்யும் வரை, ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையிலேயே இருக்கிறது என்கின்றனர் திரையுலக வட்டாரங்கள்.

Facebook Comments Box