டெஸ்ட் கிரிக்கெட் பாணியில் ஆடிய விராட் கோலி: ரசிகர்கள் விரக்தி

0

விராட் கோலியின் மந்த இன்னிங்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டனர்

இந்த ஆண்டின் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 122.86 ஆக இருந்தது. இந்த ஆட்டநிலையில் அவரது மெதுவான ஆட்டம் ரசிகர்களிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் பரவியுள்ளன.

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, 20 ஓவர்களில் 190 ரன்கள் சேர்த்தது.

மெதுவாக விளையாடிய கோலி:

பிலிப் சால்ட் உடன் கூட்டாக தொடக்கத் துடுப்பெடுத்த கோலி, தனது இன்னிங்ஸில் மூன்று மட்டுமே பவுண்டரிகள் அடித்தார். பெரும்பாலும் ஒற்றை மற்றும் இரட்டைகள் மூலம் ரன்கள் எடுத்தார். பவர் பிளே ஓவர்களில் அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தும், கோலி நிதானமான பாணியில் விளையாடியதைக் காண மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். போட்டியின் 15வது ஓவரில் அவர் வெளியேறினார். RCB அணிக்கு கோலி நிலைத்த இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற உத்தரவை பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது: “பஞ்சாப் அணி வீரர்கள் கோலிக்கு ஷார்ட் லெங்க்தில் மெதுவாக பந்து வீசியனர். இப்படிப்பட்ட ஆடுகளத்தில் 35 பந்துகளுக்கு 123 ஸ்ட்ரைக் ரேட் என்பது ஏமாற்றமே” என்றார்.

ரசிகர்கள் குற்றச்சாட்டு:

“விராட் கோலி டெஸ்ட் பாணியில் ஆடினார். அவரின் மந்த ஸ்ட்ரைக் ரேட் மற்ற பேட்ஸ்மேன்கள் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியது”, “ரஜத் பட்டிதார் சுழற்பந்து வீச்சை தாக்குவதே நோக்கியா இருந்தது. ஆனால் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ், அவரது நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்தார். அதற்கேற்ப கோலி தாக்குதலாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒற்றை ஓட்டங்களை எடுப்பதிலேயே திருப்தியடைந்தார்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 113 ரன்கள் என இருந்த RCB, 200 ரன்கள் கூட எடுக்க முடியாமல் தவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here