‘இது நடந்தால் கோலி மீண்டும் டெஸ்ட் விளையாடுவார்’ – கிளார்க் நம்பிக்கை

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 20ஆம் தேதியில் ஆரம்பமாகிறது. இந்த தொடரில் இந்திய அணி, தனது முக்கிய வீரரான விராட் கோலியின் இல்லாமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருப்பதுதான் இதற்குக் காரணம்.

இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், சில சூழ்நிலைகள் ஏற்பட்டால் விராட் கோலி தனது ஓய்வை திரும்பப்பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் கலந்துக்கொள்வார் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது.

ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய கிளார்க், “இந்திய அணி இங்கிலாந்தில் 0-5 என அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தால், கோலியின் மீள்வரவு சாத்தியமாகும். ரசிகர்கள் அவரை மீண்டும் டெஸ்ட் அணியில் காண விரும்புவார்கள். அத்துடன் கேப்டன், தேர்வுக்குழு மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அழைத்தால், அந்த அழைப்பை கோலி மறுப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது மிகுந்த காதல் கொண்டவர். சமீபத்திய அவரது பேச்சும் அதையே காட்டுகிறது” என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் குறித்து விராட் கோலி கூறியது என்னவென்றால், ஐபிஎல் கோப்பை வென்றதும், அகமதாபாத் மைதானத்தில் மேத்யூ ஹேடன் அவரை நேர்காணலில் சந்தித்தபோது, “இது என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று. இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிட்டால் இது ஐந்தாவது இடத்தில் மட்டுமே இருக்கிறது. உண்மையான மதிப்பை சம்பாதிக்க இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here