ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இதன் மூலம் 1998-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி ஐசிசி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதுவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் தலா 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எய்டன் மார்க்ரம் மற்றும் தெம்பா பவுமா, அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
282 ரன்கள் என்ற இலக்கை நான்காவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக விரட்டி சாதனை படைத்து பட்டத்தையும் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. 207 பந்துகளில் 136 ரன்களை சேர்த்த மார்க்ரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இறுதியாக, தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி தொடரை வென்றுள்ள இந்த தருணம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது.